Saturday, 24 January 2015

Vantharumoolai News

வந்தாறுமூலையில் இன்று பலத்த மழை

இன்று (24.01.2015) வந்தாறுமூலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பலத்த மழை பெய்துள்ளது

Vantharumoolai News

2015 இல் அதிசயம்

இவ் வருடத்தில் பெப்ரவரி மாதத்தில் வரும் நாட்கள் அனைத்தும் நான்கு நாட்களாக வருவதே அவ் அதிசயம்.
அதாவது

திங்கள் - 04

செவ்வாய் - 04

புதன் - 04

வியாழன் - 04

வெள்ளி - 04

சனி - 04

ஞாயிறு - 04
இது 823 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ஆகும்.

Friday, 23 January 2015

Vantharumoolai News

மழை வேண்டி பிராத்தனை

வந்தாறுமூலை பகுதியில் வரட்சி காரணமாக வயல் நிலங்கள் நீர் வற்றியமையினால் பாதிப்படைந்தது இதனால் வேளான்மை அழிவும் ஏற்பட்டுள்ளதால் இவ் ஊர் மக்கள் இன்று(23.01.2015) கண்னகை அம்மன் ஆலயத்தில் இருந்து மழை வேண்டி பச்சை சாடி எடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

      


    Vantharumoolai News

வந்தாறுமூலையில் இன்று புதிர் எடுக்கும் வைபவம்

வந்தாறுமூலை விவசாய பெருமக்களால் காலங்காலமாக மேற்கொள்ளபடும் புதிர் எடுக்கும் வைபவம் இன்று காலை நடைபெற்று ஆலயங்களுக்கு புதிர் நெல் கொண்டு செல்லப்பட்டது அங்கு பொது மக்களுக்கு புதிர் நெல் வழங்கப்பட்டது.மற்றும் இன்று வந்தாறுமூலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது.






























Thursday, 22 January 2015

Vantharumoolai News

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதியை சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பினையேற்று இன்று (22.01.2014) தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் இச் சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் இதன்போது கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலையினை தீர்ந்து வைக்கும் முகமாக ஜனாதிபதி இல் அழைப்பினை விடுத்திருக்கலாமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vantharumoolai News

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது பிறந்த தினம்

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது வருட பூர்த்தி தினம் கடந்த 18.01.2015 (ஞாயிறு) அன்று அனுஸ்டிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கேக் வெட்டி சிறப்பித்தனர்.

Wednesday, 21 January 2015

Vantharumoolai News

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு

கிழக்கு மகாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில், இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். தற்போது இவ்வைத்தியசாலையில், தலசீமியா நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இத்தட்டுப்பாட்டுக்கான என்றும் அவர் கூறினார். 'வழமையாக டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே இத்தகைய இரத்த தட்டுப்பாடு ஏற்படுவது வழமையாகும். இரத்ததான முகாம்கள் நடைபெறுவரும் இரத்த தானம் செய்வதும் குறைவடைந்துள்ளது. இக்குறைப்பாட்டை போக்க முடிந்தவர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.