மட்டக்களப்பு நகரில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்பு இனம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளமாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். 45 வயது மதிக்கத்தக்க சடலமானது வாவியின் நீரோட்டம் காரணமாக கோட்டைக்கு முன்பாக நீரினுள் உள்ள பாரிய கல்லொன்றில் தங்கி இருந்ததாகவும் பொலிசாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்காக மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பின்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பவுள்ளதாகவும், குற்றம் நடந்த இடத்தை விசாரணை செய்யும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்
(http://www.battinews.com)